• Skip to primary navigation
  • Skip to main content

OJWAI

  • Gold Rate Today
  • Horoscope

Motivational Quotes in Tamil – தன்னம்பிக்கை கவிதைகள் – Life Quotes in Tamil

By Admin on May 23, 2022 0

Are you looking for motivational quotes in Tamil? If so, you have reached the right page to know Tamil quotes, Life quotes in Tamil, life motivational quotes in tamil, motivational good morning quotes in tamil, success motivational quotes in tamil and positivity motivational quotes in tamil. Let’s read all motivational Tamil quotes now.

Motivational Quotes in Tamil

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…

தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்…

அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே…

பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்…

ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு


சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்


ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…

உன்னால் முடியும்
என்று நம்பு…
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே…

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…

எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்……

Motivational quotes in Tamil
Motivational quotes in Tamil

தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்…

தனியே நின்றாலும்
தன் மானத்தோடு…
சுமையான பயணமும்
சுகமாக….
(நம்பிக்கை)

எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு…

எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்….
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்….
( நம்பிக்கை )

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே…

எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்…

தோல்விகளை
தவழும் போது,
ஏமாற்றமென
நினையாமல்
மாற்றமென
நினையுங்கள்…
பாதிப்பு
இருக்காது…
உங்களுக்கும்
மனதிற்க்கும்…
இதுவும் கடந்து போகும்


அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது…

ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை

வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி

தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்…
(தெளிவும்-நம்பிக்கையும்)

குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி……

ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு…


முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை…

தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…

எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்…

நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்…

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக…

முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது

விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்…

எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்


நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

பிறரின் பார்வை
உங்கள் திறமையை
கண்டு கொள்ளவில்லை
என்று எண்ணாதீர்கள்
நீங்கள் போகும் பாதையில்
செய்யும் முயற்சிகளை
தொடர்ந்து கொண்டே இருங்கள்
ஒரு நாள் உங்கள் தேவை
அறிந்து அவர்கள் பார்வை
உங்கள் வசம் வரும்

வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே…
(நம்பிக்கையுடன்)

உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!

வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(உழைப்பே – உயர்வு)

முடியாது
என எதையும்
விட்டு விடாதே…!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்…

 

வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது

உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை

Motivational quotes in tamil
Motivational quotes in tamil

தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்

திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்

ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்

தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்

எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்

ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு

காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்

எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு

சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்

வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்

எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்

தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்

நம் நிலை கண்டு
கைகொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட
வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை

நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி
நினைத்த செயலை
வெற்றிகரமாக முடிக்கும் வரை
செய்வதே உண்மையான முயற்சி

மற்றவர்கள்
தோள் மீது
ஏறி நின்று
தன்னை உயரமாக
காட்டிக் கொள்வதை விட
தனித்து நின்று
தன் உண்மையான உயரத்தை
காட்டுபவனே
சிறந்த தன்னம்பிக்கையாளன்

பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்

எங்கு நீங்கள்
தவிர்க்கபட்டீர்களோ
அவமானம் செய்யப் பட்டீர்களோ
அங்கு நீங்கள்
தவிர்க்க முடியாத சக்தியாக
உருவெடுப்பது தான்
உண்மையான வெற்றி

மலையைப் பார்த்து
மலைத்து விடாதே
மலை மீதேறினால்
மலையும் உன் காலடியில்
முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே

ஆசை நிராசையாகலாம்
லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்
பயிற்சியில் குறையிருக்கலாம்
முயற்சியில் தோல்வியடையலாம்
ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய
நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய
நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற
தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே
வெற்றி உன் காலடியில்
என்பதை மறவாதே

நம்மைநாமே
செதுக்கிக்கொள்ள
உதவும் உளி இலக்கு
தன்னம்பிக்கை
விடாமுயற்சி

எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும்
என்று முயற்சிக்கும்
உன் தன்னம்பிக்கையின்
முன்னால்

நம் வளர்ச்சியைத்
தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்
போராடினால் தான்
முன்னுக்கு வர முடியும்

நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்

வெற்றியாளரின் பாதையில்
சென்று விரைவில்
வெற்றி அடைவதைக் காட்டிலும்
உனக்கென
ஒரு பாதையை உருவாக்கு
அதில் நம்பிக்கையுடன் பயணப்படு
நிச்சயமாக வெற்றி உன் வசமே
உன் வழியில்
உன்னை பின்பற்றி வர
பலர் காத்துக் கிடப்பார்கள்

எல்லை இல்லாத
வானத்தையும் அளக்கலாம்
எண்ணிக்கை கொள்ளாத
விண்மீன்களையும் எண்ணலாம்
எட்ட முடியாத நிலவையும்
எட்டி விடலாம்
முடியும் என்று
விடா முயற்சி செய்தால்
வெற்றி எனும்
மணி மகுடம்
உன் சிரம் தாங்கிடலாம்

தோல்வி அடைந்ததும்
துவண்டு போகாமல்
தோல்வி தற்காலிகமானது மட்டுமே
நிரந்தரமானதும் அல்ல
நிலைக்க வைக்கும் அளவிற்கு
நான் திறமை இல்லாதவனும் அல்ல
என்று முயற்சி கொண்டு போராடுங்கள்
வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்

உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு
எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம் ஆகும்

எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு.

Tamil Motivation Good Morning Quote

என்னால் முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட
மனிதன் யாவரும்
அடுத்தவர்களின் உதவியை
நாடுவதில்லை

முதல் முயற்சி
தோல்வி என்றால் என்ன
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யுங்கள்
தோல்வியை வென்றுவிடலாம்
வெற்றியால்

பாதைகளில் தடைகள்
இருந்தால்
அதை தகர்த்து
விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பை போல

இன்று நாம்
பேசநினைக்கும் கருத்துக்களை
சிலர் உனக்கு
என்ன தெரியும் என்று
நம்மை தடுத்துவிடுவார்கள்
அதற்கு வருந்தாதீர்கள்
காலத்தின் வட்டத்தை
நம்புங்கள்
அந்நாள்
நம் கருத்துக்கள் தான்
கை ஓங்கி நிற்கும்

இன்பமும் துன்பமும்
எல்லாம்
இறைவன் கட்டளையே
கஷ்டங்களை கொடுத்தவர்
அதற்கான தீர்வையும்
கொடுப்பார்
தன்னம்பிக்கையை ஒருபோதும்
சிதற விடாமல்
மன வலிமையோடு
எதிர்க் கொள்வோம்

பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்

நமக்கு பிடித்த ஒன்றை
அடைந்தே தீரவேண்டும்
என்ற பிடிவாதத்தை
பிடிவாதமாக
பிடித்துக்கொள்வதில்
இருக்கிறது நமது தன்மானம்

உனது நேற்றைய
தோல்விக்கான
காரணங்களை கண்டறிந்தால்
மட்டுமே
வெற்றியை நோக்கி பயணம்
செல்கையில் வரும் தடைகளை
உடைத்தெறிய முடியும்

அடுத்தவர்களின்
கற்பனைகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை
நம்மை பற்றி
நமக்கு தெரியாததா
அவர்களுக்கு
தெரிந்து விடப்போகிறது

இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்

அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்

தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்

வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!

எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)

நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது

எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)

விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே

வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்

ஓய்வில்லாமல் உழைப்பதால்
தான் கடிகாரம்
உயர்ந்த இடத்தை
அடைந்தது
நாமும் உயர வேண்டும்
என்று தன்னம்பிக்கை கொண்டு
உழைத்தால்
நிச்சயமாக உயரலாம்

துன்பமும்
தோல்விகளும்
நாம் விரும்பாமலே
நம்மைத்தேடி
வந்ததைப்போல்
நாம் விரும்பிய மகிழ்ச்சியும்
ஓர்நாள் வந்தே சேரும்
நம்பிக்கையுடன்
நடைப்போடுவோம்

சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்

ஓர் இலக்கை
அடைய வேண்டும் என்றால்
அதில் வரும்
வலி மற்றும் வேதனைகளை
அனுபவித்து தான்
கடக்கவேண்டும்
அப்போதுதான்
நம் தன்னம்பிக்கையின்
பலம் மற்றும் பலவீனத்தை
உணரமுடியும்

நம்மால் முடியவில்லை என்றால்
அதனை சவாலாக
எடுத்துக் கொள்ளுங்கள்
வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு
அதிக மதிப்புண்டு

வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன
நகர்ந்து கொண்டே இருப்போம்
நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்

எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக
பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்

ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் தான் சிறந்தவர்
என்று உங்களை நம்புங்கள்
எத்தகை கடினமான இலக்குகளை
சுலபமாக எட்டிவிடலாம்

விரிக்காத வரை
சிறகுகள் பாரம்தான்
விரித்துப் பார்த்தால்
வானம் கூட தொடுதூரம்தான்


Life Quotes in Tamil (தன்னம்பிக்கை கவிதைகள்)

விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…
இவை தான் மனிதனின் எண்ணங்கள்…!


பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.

வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.


வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.


பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது…!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.


தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ…
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்…

பழிவாங்குதல்
வீரம் அல்ல, மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்…

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!


அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது.
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்…

பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.

நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.


வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது…!

 

ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும்.
உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை
ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.

 

கொடுப்பது சிறிது என்று தயங்காதே.
வாங்குபவர்க்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே.
இழப்பவர்க்கு அது பெரிது.

எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்.
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.

 

வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை…!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை…!

Positivity Motivational Quotes in Tamil

தோழா! தூக்கி எறிந்தால்!
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை!


தளர்ந்து நிற்க்காதே!
சோர்ந்து இருக்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்.
முயன்றால் எட்டும்
உயரம் தான்
உன் வெற்றி.

நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ!
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.

சோதனைகள் இல்லாமல்
சாதனைகள் இல்லை தோழா!
தோழா! சாதித்தவன் எல்லாம்
சோதனைகளை கடந்தவன் தான்.


தன்னம்பிக்கை கவிதை

தடைகளையும், எதிர்ப்புகளையும்
துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது, வெற்றிகள்
மலராவும், மாலையாகவும்,
மகுடமாகவும் வந்து சேரும்.


சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில்
தோன்றி விட்டால்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும்
சாதிக்க முடியும்.
உன் விடா முயற்சியால்.


உனக்கான அடையாளத்தை
உலகம் உணரும் வரை,
உன்னை சுற்றி வரும் விமர்சனம்
ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.
எண்ணி வருந்தினால், வருந்திக்
கொண்டே தான் இருக்க வேண்டும்
ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில்.
காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும்.
கனவு நனவாகும் உலகம் உன்னை உணரும்.


ஒவ்வொரு தோல்வியும் உன்னை
புது வெற்றிக்கு தயார் செய்யும்.
கனவுகள் கலைந்து போகலாம்.
நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே.
நண்பா! வெற்றி உனதே! வெற்றி உனதே!

தயக்கம் தடைகளை உருவாக்கும்.
இயக்கம் தடைகளை உடைக்கும்.


முயற்சி செய்து
கொண்டே இரு.
ஒரு நாள் தோல்வி
தோற்றுப்போகும்
உன் முயற்சியிடம்.

 

இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை.
மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.
தோல்வி வந்தால் வாடாதே.
புதிய இலக்கை நோக்கி பயணம் செய்.

 

ஒரு வருடம் என்பது,
365 நாட்களை கொண்டதல்ல.
365 வாய்ப்புகளை கொண்டது.
வாய்ப்புகளை பயன்படுத்தி
வெற்றியை நமதாக்குவோம்.

Tamil good morning motivation

வெற்றி பெற விரும்பினால்,
தடைகளை உடைத்து செல்.
நம்பிக்கையை விதைத்து செல்.


தமிழ் மோட்டிவேஷன் காலை வணக்கம்

பார்த்திருந்தால், எதிர்பார்த்திருந்தால்,
காத்திருந்தால், எதுவும் நடக்காது,
கிடைக்காது, இறங்கி போராடு.
சோதனைகள் சாதனைகள் ஆகும்.
வெற்றி உன் மகுடம் ஆகும்.

முதலில், உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
பின் முயற்சி செய்யுங்கள்.
பிறகு எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு.
முடியாதது ஏதும் இல்லை இங்கு.
முயன்றால் எல்லாம் சாத்தியமே.


நண்பா! நீ அடைய நினைத்த
இலக்கை அடையும் வரை.
கல் வந்தாலும் சொல் வந்தாலும்
கலக்காமல் நீ முன்னேறு.
நண்பா! அனைத்துக்கும் பதில்
சொல்லும் உன் வெற்றி.

துன்பங்கள் துரத்தினாலும்,
சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று
வெற்றி பெறுவதே மனிதனுக்கு அழகு.
சந்தோஷமாக வாழ்வதை விட
சவால்கள் மேல் சவாரி செய்து வாழ்வதே கெத்து.


அவமானப் படும்போது அவதாரம் எடு.
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு.
புண்படுகிற போது புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு.


ஊனம் ஒரு தடையல்ல.
ஊன்றுகோலாய்
உன் தன்னம்பிக்கை
இருக்கும்போது.


தன்னம்பிக்கை காலை வணக்கம்

மரியாதை கிடைத்தால் மதித்து நில்.
அவமானம் கிடைத்தால் மிதித்து செல்.
இலக்கை நோக்கிய பயணத்தில்
வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம்.
தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்.

“இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி”

Motivational Quotes in Tamil and English

விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல.

Whenever you fall, it is to rise and not to weep.

ஒரு மனிதன் தன்னை உலகிற்கு புத்திசாலி என்று நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்.

A man succeeds when he stops proving himself to the world.


உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.

Get up with determination. Go to bed with satisfaction.

வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.

Focusing on your goals and not the obstacles is the key to success.

நீங்களே கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்பட்டுள்ளீர்கள்.

You are only blocked by walls that you build yourself.

தன்னம்பிக்கை கொண்ட மனிதன் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுகிறான்.

He who has self-confidence easily gains the trust of others.

நாம் ஒளிந்து கொள்ளும் பெண் மான்கள் அல்ல, ஒளி வீசப்போகும் விண்மீன்கள்.

We are not hiding female deer, but shining stars.

நீங்கள் செய்யாவிட்டால் கனவுகள் செயல்படாது.

Dreams don’t work if you don’t.

தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.

The opposite of success is not failure; it is a part of success.

உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்.

You try to be the change you would like to see in this world.

அமைதியாய் இருப்பவனை முட்டாள் என எண்ணிவிடாதே, பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.

Do not think that he is quiet is a fool, for he who hears is wiser than he who speaks.

வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற் படி தான்.

For the one who thinks to live, even the sky is an entrance.


உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்.

The world will easily find you if you show off your talent.

அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.

Always have the belief that something extraordinary is yet to happen.

கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.

Learn from those who are learning at present rather than from those who knew already.

நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.

Life is ours as long as we have faith in ourselves.

நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

The small efforts you make today are the nail roots of success that will change tomorrow.

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.

The one who takes advantage of the opportunities available and achieves the fruit of success is the best genius.

சிந்தனை மட்டும் செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்.

If you only know how to think you are the best counselor for yourself.

Also Read: Is Tamil Rockers Legal or Not?

Conclusion

We have provide the most popular Motivational Quotes in Tamil, Life quotes in Tamil, life quotes in tamil, தன்னம்பிக்கை கவிதைகள். 

I hope you might have enjoyed reading these Tamil quotes.

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • About
  • Contact
  • Terms and Conditions
  • Disclaimer

Copyright © 2023